இந்திய ராணுவ வீரர்களில் பாதிக்கு மேல் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்: ஆய்வு | Survey says More than half of Indian Army personnels under severe stress | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
13 லட்சம் பேர் பணியாற்றும் இந்திய இராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் “கடுமையான மன அழுத்தத்தில்” இருப்பதாக புதிய ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கிறது.
ராணுவத்தில் ஒவ்வொரு ஆண்டும் எதிரிகளுடன் சண்டை மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை விடவும், தற்கொலைகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த தரவுகள் பாதுகாப்பு சிந்தனைக் குழுவான யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூஷன் ஆப் இந்தியாவுக்கு சேவை செய்யும் கர்னல் நடத்திய புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆனால் இராணுவம் இந்த ஆய்வை நிராகரித்தது, கணக்கெடுப்பிற்கான மாதிரி அளவு மிகச்சிறியதாக இருப்பதால் இதுபோன்ற “தொலைநோக்கு” முடிவுகளுக்கு வரமுடியாது என்று தெரிவித்தது. “இந்த ஆய்வு ஒரு தனிநபரால் செய்யப்பட்டுள்ளது, மாதிரி அளவு சுமார் 400 வீரர்கள். இந்த ஆய்வின் சம்பந்தப்பட்ட வழிமுறை நமக்கு தெரியவில்லை, அதனால் இது தர்க்கத்திற்கு பொருந்தாது ”என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
எவ்வாறாயினும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பதுதான் உண்மை. 2010 முதல் இராணுவம் 950 க்கும் மேற்பட்ட வீரர்களை தற்கொலையால் இழந்துள்ளது. எல்லைகளில் நீடித்த வரிசைப்படுத்தல், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் தொடரும் பதட்டம் மற்றும் பயங்கரவாத (சிஐ / சிடி) நடவடிக்கைகள் படையினரின் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. “களப் பகுதிகளில்” தங்கியுள்ள வீரர்கள் தங்கள் குடும்ப பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள் போன்ற சிக்கல்களால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
கர்னல் ஏ கே மோர் நடத்திய ஆய்வானது, கடந்த இருபது ஆண்டுகளாக “செயல்பாட்டு மற்றும் செயல்படாத அழுத்தங்கள்” காரணமாக இராணுவ வீரர்களிடையே “மன அழுத்த அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” ஏற்பட்டுள்ளது. “செயல்பாட்டு அழுத்தங்கள்” தொழிலுக்கு ஒருங்கிணைந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், “செயல்படாத அழுத்தங்கள்” “படையினரின் உடல்நலம் மற்றும் போர் திறன் ஆகியவற்றில் பாதகமான விளைவுகளை கூட்டுகின்றன” என்று ஆய்வு குறிப்பிடுகிறது.